Posted by : Unknown Sunday, September 4, 2011

கருவில் கற்ற வித்தை
என் கவிதை தொழில்..

தொலைந்த காதலுக்காக..
அலைந்த தேடலுக்காக..
ஆர்ப்பரிக்கும் வேதனைகளுக்காக..
நெற்றிப்பொட்டில் உதிக்கும் 
கோபத்திற்காக..

எப்படியோ என்னுடன்
ஒட்டிப்பிறந்த துணைவன்..

எப்படி பிரிவது...?

அலுவலக வேலைகள் போதும்
அலவளாவ வார்த்தகள் எதற்கடா..?
நோட்டுக்களை தேடி திரியும் 
சில்லரைகளுக்கு என்ன தெரியும் 
என் கவி பற்றி..?

யாருக்கும் அஞ்சா என் பாட்டன்
கற்றுக் கொடுத்த வித்தை....
என் தாயின் கருவிலேயே
கற்றுக் கொண்ட வித்தை..
கண்களின் ஈரமும்
கோபத்தின் உக்கிரமுமாய்
இரு வேறு கோணங்களில்
என்னை அளவெடுத்து
அறிமுகம் செய்த
என் கவி மறப்பேனோ..?

வார்தைகளின் ஓவியம் 
வரைபவனுக்கு மட்டும்
சொந்தம் அல்லவா..?

காலம் எம்மை வீழ்த்தி விடுமா..?
கட்டளைகளுக்கு 
எம்தன் கவி 
தலை தாழ்த்தி விடுமா..?
வறுமை தான் எம்மை 
மிஞ்சிவிடுமா..? - இல்லை
வானம் தான் எம் 
பாதம் தொட்டுவிடுமா..?

பகல் தொலையும் வேலைகளில்
பாரிருள் பார்த்திடுகையில்
எட்டிப்பார்க்கும் 
விண் ஒளி நானல்லவா.?
எம்மை 
வீதிகளில் ஓடுகின்ற


{ 1 comments... read them below or add one }

  1. நல்ல கவிதை..தங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்..தொடரட்டும் உங்கள் கை வண்ணம்..வாழ்த்துக்கள்.

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -