- Back to Home »
- நெடுந்தூர பயணம்
Posted by : Unknown
Saturday, September 22, 2012
வெளிச்சம் இல்லாத
நெடுந்தூர இருண்ட
பயணம் என்னுடையது..
என் கண்களுக்கு
தெரிவதெல்லாம்
தூரத்து ஒளியில்
புள்ளியாய் இலக்கு
தனிமையில் பயணம்.
காரணம் துணைக்கு
துன்பம் நேரக்கூடாதே
என்பதால் தான்
உன் வீரமும், ஆர்வமும்
என்னை வல்லமையாக்கும்
என்பதையும் நானறிவேன்
துணைக்கு அழைக்க
""ஆசைதான்""
நெடுந்தூர பயணத்தை
உன் பாதங்கள் தாங்குமா..?