Posted by : Unknown Thursday, September 27, 2012

என்னடி செய்தேன் உனக்கு..?

செத்துவிடுவாய் என்று தானே
உன் கரத்தை இருக்கமாக பிடித்தேன்..?

ஏன் அத்தனை ஆசைகளையும்
உனக்காகத்  தானே புதைத்துக்கொண்டேன்..?

இதயம் வலிக்கிறதடி உன்னால்,,,

நீ என் காதலி இல்லையா
அல்லது
நீ செய்தது காதலே இல்லையா..?

என் நெஞ்சில் சாய்ந்து
உறங்கிட மட்டுமே
ஆசைப்படுகிறேன் என்று
என்னை நீ தானே ஆட்டுவித்தாய்

விலகிவிடு என்றபோதெல்லாம்
உயிரை விடுவேன் என்றாய்

என் ஒவ்வொரு நொடியையும்
நீ தானே ஆக்கிரமித்தாய்
இப்போது ஏன் இப்படி மாறினாய்,,?

துளி கூட கலப்படம் இல்லாமல்
தனடி என் அன்பை உணர்ந்தாய்

இப்படி அனைத்தையும்
மறந்துவிட்டு சிரிக்கின்றாயோ
டே முட்டாளே என்று...!!

ஆயிரம்  வலிகளை கொடுத்தாலும்
உண்மையான காதல்
விட்டு கொடுக்க மாட்டேன் என்கிறதடி,,


{ 1 comments... read them below or add one }

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -