Archive for March 2013

விரைவில் வெற்றிச் செங்கொடியோடு


எச்சிலை தொட்டழித்து
எழுதிய எழுத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை
இருதயத்தின் அடிதொட்ட
இரும்பின் காயம் கண்டேன்...

சுட்டவன் புத்திசாலிதான்,,
மார்த்தொட்ட குண்டு
புறமுதுகுடைத்தால்,
எந்தை மைந்தர்கள் - அவன்
தலை சாய்த்திடுவனரோ
என்றெண்ணியே என் 
நெஞ்சுடைத்து உயிர் பரித்தான்...

காலன் தொட்ட கடைசி மூச்சில்
இந்த காலம் மறக்கா..,
வரலாறானேன்

பச்சிளம் குழந்தையென்
 பசி தீர்க்க
எச்சிலைதிண்ணும் 
கோழையல்ல நான்

விடுதலையுணர்வை 
என் மக்களுக்கு கொடுத்தே
விடைபெறுகிறேன் - அதிலே
அகமகிழ்வடைகிறேன்!!!

துரோகிகளை, எதிரிகளை
இனம் கண்டெழுந்து,
வேட்கையை தகித்துக்கொள்ள
அக்காக்களோ, அண்ணன்களோ
இன்னுயிர் தீர்க்காதீர் - 
இன்னல்கள் தீர 
இனி ஒரு விதி செய்யுங்கள்!!

எந்தையின் மைந்தர்களே!!!
எம் ஒருவனொடு போய்விடவில்லை
இன்னும் முட்களுக்கிடையில்
பச்சிளம்குழந்தைகளின்
தொப்புள்கொடி முடியாத
இரத்த சீற்றம் இடைவிடாதே 
வடிந்து கொண்டிருக்கிறது....

போராடுவது 
வெற்றிக்காக அல்ல
உரிமைக்காக என்று
சூழுரைத்து  வெறியேற்றுங்கள்

திரும்பி வருகிறேன்
வெகு விரைவில்

புது களத்தில்
புளுதி பறக்க
வெற்றிச் செங்கொடியோடு
முத்தண்ணன் முன்நிற்க
பக்கத்தில் எந்தையுடன்
உங்கள் சிந்தையினூடே....

- பாலச்சந்திர பிரபாகரன்


உரிமை இல்லையடி!!



உரிமை இல்லையடி!!

மிஞ்சி நிற்கும்

உன் நினைவுகளை
பதிவேற்றி
பத்திரப்படுத்தும்
என் சுதந்திரத்தை, 
உத்தரவிட்டு
சிறைபடுத்தும்
உரிமை 
உனக்கு இல்லையடி
பெண்ணே!!!

 ***  ***  ***  *** ***  ***  *** 

Monday, March 11, 2013
Posted by Unknown

வாசித்துப் பாருங்கள் வலையுலக புதுக்குறள்

  வலையுலகில் நாள்தோறும் பல்வேறு பதிவர்கள் பல கருத்துக்களை பதிந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரு வரி பின்னூடத்திற்காகவும், ஒரு வித மன நிறைவுக்காகவும் தான் வலையுலகில் பங்காற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு புதிய பதிவரையும் பின்னூட்டம் மூலம் உற்சாகப்படுத்துவோம்.

நல்ல கருத்துகளை வரவேற்பதிலும், வாழ்த்துவதில் தயக்கம் வேண்டாம் தோழர்களே!!

மண்ணிற்கு எப்படி நல்ல செறிவூட்டப்பட்ட உரம் பலன் தருமோ அதே போல பின்னூட்டம் ஒருவரது எழுத்திற்கு உரம் போல இருக்கும். நமது தலைமுறைகள் இதை செய்தாலே போதும் இனி வரும் காலங்களில் ஒரு மாற்றம் கண்ட புதிய சமூகம் பிறக்கும்.

இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு சேர் ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த திருக்குறளை வாசிக்கும் போது மனதில் நமது பதிவர்களை மனதில் கொண்டு உதயமான புதிய குறள்.


செறிவுடன் திறனான மண்ணூட்டமும்  பின்னூட்டமும்
மாந்தர்க்கே பயன் தருமாம்.

காலையில் பகிர்தலும் மாலையில் பதிதலும்
கணினினுக்கும் கடமைக்கும் உரியதாம்.

வலப்புற சுட்டியை இடக்கையால் சொடுக்கி
வலைப்பதியச் செய்வதே இடுகை.



- தொழிற்களம் அருணேஸ்
Friday, March 1, 2013
Posted by Unknown

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -